RSS

Sunday, August 21, 2011

ரய்யான்

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! 


மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.


நோன்பு பற்றி அண்ணலாரின் அமுத மொழிகள் சில


“நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



“ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
 
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள்  விலங்கிடப்படுகின்றனர்.”   என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 



“பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார



“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” ”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Tuesday, August 9, 2011

ரமழான் துஆக்கள்

ரமழான் காலத்தில் நாம் அதிகமதிகம் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுவோம் .அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம். 

முதல் பத்து தினங்களில்
 அல்லாஹ்வின் அருளை،கிருபயை நம்மீது பொழிந்தருள  கீழ் வரும் துஆவை அதிகம் ஓத வேண்டும்.
اللهم ارحمنا  برحمتك يا  أرحم راحمين     
பொருள்:கிருபையாளர்களுக்கெல்லாம் மகா கிருபையாளனே! உன்னுடைய அருளைக் கொண்டு எங்களுக்கு கிருபை செய்வாயாக!

இரண்டாவது பத்தில் 
பாவமன்னிப்பை நாடி இந்த துஆவை அதிகமாக  ஓதவேண்டும்.

 اَلّلهُمَّ اغْفِرْلَناَ   ذُنُوْبَناَ  خَطَايَاناَ  كُلَهَا  يَا رَبَّ  الْعَالَمِيْن


பொருள்:யா அல்லாஹ்! அகிலத்தாரை இரட்சிப்பவனே!எங்களுடைய தவறுகளையும்.எங்கள் அனைத்து பாவங்களையு மன்னித்து  அருள்புரிவாயாக!

இறுதி பத்தில்


நரக வேதனையை விட்டு பாதுகாவல் வேண்டி இந்த துஆவை  அதிகமாக  ஓதவேண்டும்.

اللهم  أعتقنا من النار وأدخلنا  الجنة  يا رب العالمين  


பொருள்;உலகத்தாரை இரட்சிப்பவனே! நரக நெருப்பிலிருந்து எங்களுக்கு விடுதலை அளிப்பாயாக! இன்னும் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வாயாக!


மேலும் துஆக்களுக்கு இதையும் பாருங்களேன்

உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Tuesday, July 26, 2011

தயம்மும் ஓர் விளக்கம்

  1.  உளூவுக்கான மாற்றுப் பரிகாரம்
தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

Monday, July 4, 2011

தொழுகையின் ஃபர்ழுகள் --19

நாம் தொழும்போது அதன் ஃபர்ழுகளைத் தெரிந்துக் கொள்வோம்,
இதில் ஒன்றை விட்டாலும் தொழுகை கூடாது என தெரிந்து தொழுவோம்,.

1.தொழுகைக் கான நிய்யத்.(சுப்ஹ்,லுஹ்ர், அஸ்ர். மஃஅரிப், இஷா ஆகிய நேரங்களின் தொழுகையை தொழுகிறோம் என்று மனதால் நினைத்தல்)
2.முதலாம் தக்பீர் /அல்லாஹ் அக்பர் என்று மொழிதல்.
3. நின்று தொழுதல். 
4.பிஸ்மியுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதல்.
5.ருகூவு செய்தல்.
6.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
7.மீண்டும் நிலைக்கு வருதல்.
8.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
9.முதலாம் ஸுஜுது செய்தல்.
10.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
11.இரு ஸுஜுதுகளுக்கிடையில் (நடு இருப்பு) இருத்தல்.
12.அதில் சிறிது நேரம்  தாமதித்தல்.
13..இரண்டாம் ஸுஜுது செய்தல்.
14..அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
15;கடைசி அத்தஹிய்யாத்து ஓதல்.
16.அதில் நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து ஓதல்
17.இதில் அத்தஹிய்யாத்திற்காகவும்,ஸலவாத்திற்காகவும் இருத்தல்
18ஒரு முறை ஸலாம் சொல்லுதல்
19.மேற்கூறப்பட்டவைகளை வரிசையாக செய்து முடித்தல்.


நூல்;அஹ்காமுஷ் ஷாஃபிய்யா




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்.

Tuesday, May 24, 2011

ஒழு செய்வது எப்படி?

பாகம்--2

ஒளூவின் சுன்னத்துக்கள் பதினைந்து


1.أعود ،بسم அவூது, பிஸ்மி ஓதுதல்.
2.பல் துலக்கல்.
3.மணிகட்டுக்கள் வரை இரு கைகளையும் கழுவுதல்.

Saturday, May 21, 2011

ஒழு செய்வது எப்படி?

பாகம் -1


ஒளுவின் ஃபர்ளுகள் ஆறு


”ஃபர்ளு”என்பது எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதில் சில அம்சங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.எனவே கீழ் வரும் செயல்களைக் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். 

1.நாம் ஒளுச் செய்கிறோம் என்று மனதால் எண்ண(நிய்யத்) வேண்டும்.


2.அந்த எண்ணத்துடனே (நிய்யத்துடன்) முகத்தை கழுவ வேண்டும்.

Thursday, March 24, 2011

இஸ்லாமிய கேள்வி பதில்

கீழ்கானும் இனையதள்ங்களுக்குச் சென்று மார்க்கத்தின் சில அடிப்படை
விஷயங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.


puzzle /தொழுகை

 கேள்வி பதில் பகுதி--1

கேள்வி பதில் பகுதி--2

  கேள்வி பதில் பகுதி--3

 கேள்வி பதில் பகுதி--4


கேள்வி பதில் பகுதி---5


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்ள்

Sunday, March 6, 2011

அல்குர்’ஆன் பற்றிய கேள்வி பதில்



 உம்முல் குர்ஆன்(குர்ஆனின் தாய்)என்பது எந்த சூராவைக் குறிக்கும்?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
 அல்-பாத்திஹா

துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

 திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
 இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

 நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்

Saturday, February 26, 2011

தொழுகை


தொழுகை பற்றிய கேள்வி பதில்

1.முஸ்லிம்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்?
முஸ்லிம்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது
2. ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களைக் கூறுக!
 fபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா


3. பஜ்ர் தொழுகையின் நேரம் எது?
 அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்

Thursday, February 17, 2011

உறவுகள்





“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.


அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்


இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.