RSS

Tuesday, July 26, 2011

தயம்மும் ஓர் விளக்கம்

  1.  உளூவுக்கான மாற்றுப் பரிகாரம்
தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

Monday, July 4, 2011

தொழுகையின் ஃபர்ழுகள் --19

நாம் தொழும்போது அதன் ஃபர்ழுகளைத் தெரிந்துக் கொள்வோம்,
இதில் ஒன்றை விட்டாலும் தொழுகை கூடாது என தெரிந்து தொழுவோம்,.

1.தொழுகைக் கான நிய்யத்.(சுப்ஹ்,லுஹ்ர், அஸ்ர். மஃஅரிப், இஷா ஆகிய நேரங்களின் தொழுகையை தொழுகிறோம் என்று மனதால் நினைத்தல்)
2.முதலாம் தக்பீர் /அல்லாஹ் அக்பர் என்று மொழிதல்.
3. நின்று தொழுதல். 
4.பிஸ்மியுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதல்.
5.ருகூவு செய்தல்.
6.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
7.மீண்டும் நிலைக்கு வருதல்.
8.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
9.முதலாம் ஸுஜுது செய்தல்.
10.அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
11.இரு ஸுஜுதுகளுக்கிடையில் (நடு இருப்பு) இருத்தல்.
12.அதில் சிறிது நேரம்  தாமதித்தல்.
13..இரண்டாம் ஸுஜுது செய்தல்.
14..அதில் சிறிது நேரம் தாமதித்தல்.
15;கடைசி அத்தஹிய்யாத்து ஓதல்.
16.அதில் நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து ஓதல்
17.இதில் அத்தஹிய்யாத்திற்காகவும்,ஸலவாத்திற்காகவும் இருத்தல்
18ஒரு முறை ஸலாம் சொல்லுதல்
19.மேற்கூறப்பட்டவைகளை வரிசையாக செய்து முடித்தல்.


நூல்;அஹ்காமுஷ் ஷாஃபிய்யா




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.